ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் தற்போது பணியில் உள்ள வீரர்களோடு முன்னாள் வீரர்களும் அணிவகுத்து வந்த காட்சியை பார்வையாளர்கள் கண்டுரசிப்பு
Apr 25 2017 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் தற்போது பணியில் உள்ள வீரர்களோடு முன்னாள் வீரர்களும் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
முதல் உலகப்போரின்போது, 1915-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ராணுவத்தினர் தங்களையும் போரில் ஈடுபடுத்திக் கொண்டனர். துருக்கி நாட்டின் Gallipoli என்ற இடத்தில் அவர்கள் தாக்குதலை தொடங்கியபோது, கடுமையான பதிலடியை எதிர்கொள்ள நேரிட்டு பல லட்சம் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
தங்கள் நாட்டுக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூலாந்து ராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி Anzac தினம் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி, இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர முக்கிய வீதிகள் வழியாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், ராணுவத்தில் தற்போது பணியாற்றும் வீரர்களும், முன்னாள் வீரர்கள், கடற்படையினர் மற்றும் விமானப்படை வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பில் ராணுவ இசைக்குழுவினரும் பங்கேற்று இசைக்கருவிகளை வாசித்தபடி அணிவகுத்துச் சென்றனர்.