சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித்தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு
Apr 25 2017 7:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
சிரியா அதிபர் பஷர் அல் ஆசாதுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசுப்படையுடன் இணைந்து அமெரிக்கா கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 7,631 பேர் உயிரிழந்ததாக, பிரிட்டனைச் சேர்ந்த போர் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.