பிரான்சில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் - பலர் படுகாயம்
Apr 27 2017 8:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸ் தலைநகர் Paris-ல் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் பலர் படுகாயம் அடைந்தனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் Emmanuel Macron-க்கு எதிராக தலைநகர் Paris-ல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் , தடியடியும் நடத்தினர். இதில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், Emmanuel Macron வெற்றிபெறுவார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.