கிர்கிஸ்தான் நாட்டில் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த பரிதாபம் : மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்
Apr 30 2017 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிர்கிஸ்தான் நாட்டில் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி, 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு, உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதையடுத்து மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக, கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.