பெரு நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய இசைத் திருவிழா - இசைக்கருவிகளை வாதித்து பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
Apr 30 2017 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில் நடைபெற்ற திருவிழாவில், பாரம்பரிய இசைக்கருவியை இசைத்தும், நடனமாடியும், பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அந்நாட்டு மக்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில், ஆப்ரிக்க-பெரு கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட Cajon இசைக்கருவியின் புகழை பரப்பும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் திருவிழா நடத்தி வருகின்றனர். தலைநகர் லிமாவில் 10-வது ஆண்டாக நேற்று நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு Cajon இசைக்கருவியை வாசித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆட்டம்-பாட்டத்துடன் இந்த விழா களைகட்டியது.