பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக அதிர்ச்சித் தகவல்
Jun 21 2017 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
1947ம் ஆண்டில் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் 6 சதவீத இந்துக்கள் மட்டுமே வசித்து வந்தனர். ஆனால், தற்போது, 23 சதவீதமாக எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், அவர்களில் ஏரளமானோர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சிந்து மாகாணத்தில் அதிகமாக இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில், குற்றங்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதாகவும், சிறுமிகள் கடத்தல் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கட்டாய திருமணம் செய்துவைத்தல் உள்ளிட்டவை அரங்கேறுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்துக்கள், அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.