பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு
Jun 22 2017 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனா - பாகிஸ்தான் பொருளாதார திட்டம் காரணமாக பாகிஸ்தானில் வாழும் சீனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பாதுகாப்பு கருதி சீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், பாகிஸ்தான் அரசு 15 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீன மக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பலுசிஸ்தானில், சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், நட்பு ரீதியாக வழங்கப்படும் விசாக்கள் தவறுதலாக பயன்பட்டு விடக்கூடாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.