பலுசிஸ்தான் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறி பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு சங்கம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் குற்றச்சாட்டு
Jun 22 2017 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனா - பாகிஸ்தான் இடையே வர்த்தகத்திற்காக சாலை அமைக்கும் பணியால் பலுசிஸ்தான் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறி, பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு சங்கம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம் சாட்டியுள்ளது.
சீனா - பாகிஸ்தான் இடையே வர்த்தகத்திற்காக சாலை அமைப்பதாக கூறி, ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல பலுசிஸ்தான் வழியாக பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருளாதார பாதை திட்டத்திற்கு பலுசிஸ்தான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீனா - பாகிஸ்தான் இடையே வர்த்தகத்திற்காக சாலை அமைக்கும் பணியால், பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக, பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு அமைப்பு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பலுசிஸ்தானில் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களை, கடத்தி கொல்வது, அடித்து சித்ரவதை செய்வது உள்ளிட்ட செயல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பலுசிஸ்தான் அமைப்பு ஐ.நா சபையில் கோரிக்கை வைத்துள்ளது.