பிரேசிலில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து - 21 பயணிகள் பரிதாப பலி
Jun 23 2017 7:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசில் நாட்டில் பயணிகள் பேருந்து மீது கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரசில் நாட்டின் Alfredo Chavez நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. மேலும், அடுத்தடுத்து வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கொடூர விபத்தில் பயணிகள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 22-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், காவல்துறையினர் மீட்புப்பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர்.