பாகிஸ்தானில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு - 62 பேர் உடல்சிதறி பலி - 120க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Jun 24 2017 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில், 62 பேர் உடல்சிதறி பலியாகினர். 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாதிகளின் களமாக மாறியுள்ள பாகிஸ்தானின் Parachinar நகரில் உள்ள பஜார் பகுதியில், ரம்ஜானையொட்டி கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குண்டுவெடித்தது.அதனைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் மாவட்ட நிர்வாக அலுவலகம் மற்றும் நகரின் மற்றொரு பகுதி என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவங்களில் 62 பேர் உடல்சிதறி பலியாயினர். 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த கோர தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை Balochistan மாகாணத்தின் தலைநகர் Quetta-வில், காவல்துறை தலைமை அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில், காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே, கராச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மர்மநபர்கள் மூன்று பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 4 காவலர்கள் உயிரிழந்தனர்.