ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 என்ற ராக்கெட் மூலம் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்கு உதவும் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பியது
Jun 26 2017 8:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 என்ற ராக்கெட் மூலம் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்கு உதவும் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு, மீண்டும் பூமிக்கு திரும்பியது.
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக செலவை குறைக்கும் வகையில், மறுசுழற்சி முறையில் ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தும் விதமாக, நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள Vandenberg விமானப்படைதளத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 10 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் படி ஃபால்கான் 9 ராக்கெட் நேற்று ஏவப்பட்டது. குறிப்பிட்ட தொலைவு பயணித்த பின், அதன் முதல் பாகம் பிரிந்து பூமியை நோக்கி விரைந்தது.
பின்னர், பசிபிக் பெருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த டிரோன் கப்பலில் செயற்கைக்கோளை சுமந்து சென்ற orbital-class booster வெற்றிகரமாக தரையிறங்கியது.