சுவிட்சர்லாந்தில் கோடை விழாவின் நிறைவாக நடைபெற்ற வாணவேடிக்கை : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு
Aug 13 2017 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுவிட்சர்லாந்தில் கோடை விழாவின் நிறைவாக நடைபெற்ற வாணவேடிக்கையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வருடாந்திர கோடைத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், விழாவின் நிறைவாக ஜெனிவா ஏரி பகுதியில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.