சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில், அந்தரத்தில் தொங்கி உயிருக்குப் போராடிய மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
Aug 16 2017 7:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில், அந்தரத்தில் தொங்கி உயிருக்குப் போராடிய மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்ஸென் நகரில் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒரு கட்டடத்தின் 23-வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 80 வயது மூதாட்டி ஒருவர், 22-வது மாடியில் உள்ள வலை ஒன்றில் சிக்கி உயிருக்குப் போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மூதாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.