இத்தாலி அருகே இஸ்சியா தீவில் நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி, 25 பேர் காயம்
Aug 22 2017 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலி அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 25 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாலியில் உள்ள இஸ்சியா தீவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 4 ரிக்டர் அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கடற்கரை நகரமான நேபில்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். சில இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 25 பேர் காயம் அடைந்தனர். நில நடுக்கத்தில் இஸ்சியா தீவின் புராதன கிறிஸ்தவ தேவாலயம் உள்பட பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கேசமிக்சி போலா நகரில் பெரும்பாலான கட்டடங்கள் அடியோடு இடிந்து நாசமாயின. இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.