சிரியாவின் ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை : 19 குழந்தைகள் உள்பட 42 பேர் உயிரிழப்பு
Aug 23 2017 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவின் ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 19 குழந்தைகள் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் புரட்சி நடந்து வருகிறது. அரசுப் படைகள் மற்றும் புரட்சி குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் பணியில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்கள் நாடுகளிsன் விமானப் படைகள் மூலம் அவ்வப்போது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இரண்டாம் நாளாக நடைபெற்ற இந்த தாக்குதலில் ரக்கா நகரை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்த 19 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை, சிரியா போர் நிலவரங்களை கண்காணித்துவரும் நடுநிலையாளர்கள் குழு உறுதிபடுத்தியுள்ளது.