சீனாவை அதிபயங்கரமாக தாக்கிய Hato புயலுக்கு 9 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம் - ஹாங்காங், Macao தீவுகள் கடும் பாதிப்புக்குள்ளானதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்
Aug 24 2017 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவை புரட்டியெடுத்த Hato புயலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 200 பேர் வரை காயமடைந்திருக்கும் நிலையில், பாதிப்புக்குள்ளான ஹாங்காங், Macao தீவுகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சீனாவில் நேற்று மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் Hato என்ற சூறாவளி வீசியது. இந்த சூறாவளிக்கு கடற்கரை நகரங்களான ஹாங்காங், Macao ஆகிய தீவுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. ஏற்கெனவே 7 பேர் இந்த சூறாவளிக்கு பலியான நிலையில், மேலும் இருவர் உயிரிழந்ததாக, சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 200 பேர் காயமடைந்திருப்பதால், அவர்களுக்கு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Macao தீவில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோல் ஹாங்காங் நகரமும் இந்த Hato புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள், மின்கம்பங்கள் போன்றவை கீழே விழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. சீனாவில் ஏற்கெனவே வீசிய சூறாவளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, Hatoவின் வேகம், சக்தி போன்றவை மிகக்கடுமையாக இருந்ததால், அதற்கேற்ப மழைப்பொழிவும் அதிகம் இருந்ததாக குவாங்டாங் நகர வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.