சர்வதேச நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை எதிரொலி - வடகொரியாவில் பெட்ரோல் விலை 20 சதவீதம் உயர்வு
Sep 23 2017 8:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியா நடத்தி வரும் தொடர் அணுஆயுத சோதனை காரணமாக, அங்கு சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் விளைவாக வடகொரியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வடகொரியா சமீபத்தில் 6-வது அணு ஆயுத பரிசோதனை மேற்கொண்டதை அடுத்து, அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. இதனைத் தொடர்ந்து, சீனாவும், வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைத்ததுடன், அங்கு உற்பத்தி செய்யும் ஆடைகளை வாங்க முற்றிலுமாக நிறுத்தியது.
இதனையடுத்து, பல்வேறு நாடுகளும் வடகொரியாவுக்கு பொருட்களின் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டன. இந்த தாக்கத்தின் விளைவாக, வடகொரியாவில் எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு பெட்ரோல் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.