மெக்சிகோவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
Sep 24 2017 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல, இரண்டு நிலநடுக்கங்களால் உருக்குலைந்து போனது மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவு ஆகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. கடந்த 19-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250 பேர் வரை பலியாகினர். அதற்கு முன்பாக, இம்மாதம் 7-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 4 ஆயிரத்து 300 முறை நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.