துபாயிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜெர்மனி வந்த எமிரேட்ஸ் விமானம் : பலத்த காற்றுக்கு இடையே குலுங்கிய நிலையில் விமானத்தை விமானி சாமர்த்தியமாக தரையிறக்கினார்
Oct 7 2017 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாயில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன், ஜெர்மனி வந்த எமிரேட்ஸ் விமானம், பலத்த காற்றுக்கு இடையே குலுங்கிய நிலையில், விமானத்தை அதன் விமானி சாமர்த்தியமாக தரையிறக்கினார்.
துபாயில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், ஜெர்மனியின் டூசல்டார்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்க வந்தது. அப்போது, 20 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசி, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த விமானத்தை, விமானி சாதுர்யமாக தரையிறக்கினார். குலுங்கிய நிலையில் தரையிறங்கிய விமானம், பின்னர் ஓடுதளத்தில் இயல்பாக ஓடத் தொடங்கியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை, ஒரே நாளில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.