அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Oct 10 2017 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் உபயோகிப்பதாக வந்த தகவலையடுத்து டெக்சாஸ் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபரால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.