சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் காவல்நிலைய தலைமையகம் மீது 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பேர் பலி - 10 பேர் படுகாயம்

Oct 12 2017 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மீது 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில், அந்நகரின் காவல்நிலைய தலைமையகம் அமைந்துள்ளது. இந்நிலையில், காவல் தலைமையகத்திற்குள் இரண்டு தீவிரவாதிகள் நுழைய முயன்றதைக்‍ கண்ட போலீசார், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனிடையே, அந்த தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை முன்னதாகவே வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் சில போலீசார் காயமடைந்தனர். உடனே அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைமையகத்தின் பின்புறம் ஒரு தீவிரவாதி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, அவனும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவங்களையடுத்து அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது.

இந்த கோர தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 2 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த 2-ம் தேதி மிடான் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00