ஈராக்கில் குர்திஷ் போராளிகள் வசம் இருந்த கிர்குக் நகர ஆளுநர் மாளிகையை கைப்பற்றியது ராணுவம் - தொடரும் சண்டையால் நகரை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

Oct 17 2017 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்-ல் குர்திஸ்தான் போராளிகள் வசம் இருந்த கிர்குக் நகர ஆளுநர் மாளிகையை அமெரிக்க கூட்டுப்படை உதவியுடன் ஈரான் ராணுவம் கைப்பற்றியது.

ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள கிர்குக் நகரை ஈராக் அரசுக்கு எதிரான குர்திஸ்தான் போராளிகள் கைப்பற்றி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந்தனர். இந்நகரை மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையின் உதவியுடன் ஈரான் ராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கிர்குக் நகருக்குள் நுழைந்த ராணுவத்தினர் நகரின் மையப்பகுதியில் இருந்த விமான நிலையத்தை கைப்பற்றினர். பின்னர், மத்திய பகுதிக்கு முன்னேறி சென்ற வீரர்கள் கிர்குக் ஆளுநர் மாளிகையையும் கைப்பற்றினர்.

இதனைதொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்த குர்திஸ்தான் கொடி இறக்கப்பட்டு ஈராக் நாட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதேபோன்று கிர்குக் நகரின் வடக்கு பகுதியில் குர்திஸ்தான் போராளிகள் வசம் இருந்த எண்ணெய் நிறுவனத்தையும் ஈராக் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

குர்திஷ் போராளிகளுக்கும், ஈராக் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருவதால் கிர்குக் நகரை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00