இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலைகள் பெரு நாட்டில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன : சிலைகள்மீது பொதுமக்கள் மலர் தூவி நன்றி
Oct 19 2017 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அற்புதங்களை நிகழ்த்திய இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலைகள், பெரு நாட்டில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலைகள்மீது பொதுமக்கள் மலர் மாரி பொழிந்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பொதுமக்களின் துயர் துடைக்க பல்வேறு அற்புதங்களை இயேசு கிறிஸ்து நிகழ்த்தியுள்ளார். அதனை நினைவூட்டும் வகையில், பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது. 1687ம் ஆண்டு நிகழ்ந்த கடுமையான பூகம்பத்தின்போது தப்பியது, இயேசு கிறிஸ்துவின் திருவுருவச் சிலை மட்டுமே. அந்தச் சிலை ஒவ்வொரு வருடமும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நேற்று லிமா நகரில் முக்கிய வீதிகள் வழியாக பொன்வண்ணம் கொண்ட 3 இயேசு கிறிஸ்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பெரு நாட்டின் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியபின்னர் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆங்காங்கே சாலையின் இருபுறம் உள்ள வீடுகளின் மாடிகளிலிருந்து பொதுமக்கள் மலர் தூவி தங்களுடைய மரியாதையை செலுத்தினர்.