சீனாவில் மருத்துவர்களுக்கான தகுதித்தேர்வு : மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோ வெற்றி
Nov 8 2017 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோ வெற்றி பெற்றுள்ளது.
சீனாவில் இந்த ஆண்டுக்கான மருத்துவர் தகுதி தேர்வு நடைபெற்றது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். அவர்களுடன் ஒரு ரோபோ-வும் தேர்வு எழுதியது. இந்த ரோபோவை சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும் டிசின்டுவா பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கினர். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ரோபோ மருத்துவருக்கான தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அதிகபட்சமாக 360 மதிப்பெண் பெற்று இருந்தனர். ஆனால் இந்த ரோபோ அவர்களைவிட அதிகமாக 456 மதிப்பெண் பெற்றுள்ளது.
தேர்வு எழுதியவர்களுக்கு இன்டர்நெட் உதவி வழங்கப்பட்டது. ஆனால், ரோபோ எந்தவித உதவியுமின்றி தேர்வு எழுதியுள்ளது. இந்த ரோபோக்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்டவையாகும்.