பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பீதி
Nov 20 2017 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பசிபிக் பெருங்கடலில் இன்று காலை 7 புள்ளி 3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7 புள்ளி 0 என ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் ஏதும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இதே பகுதியில் 6 புள்ளி 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.