இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பீதியடைந்த பொது மக்கள் சாலைகளில் தஞ்சம்
Dec 16 2017 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பீதியடைந்த பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிசாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தோனேசியாவின், ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் ஆறு புள்ளி ஐந்து ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கடியில் சுமார் 91 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் வரை உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.