கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாய்லாந்தில் உள்ள பள்ளிக்கூடத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, யானைகள் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கி பரவசப்படுத்தின
Dec 23 2017 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் இதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதன் ஒருபகுதியாக, தாய்லாந்தின் Ayutthaya நகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில், இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக, அரசின் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 4 யானைகள், கிறிஸ்துமஸ் தாத்தா போல சிவப்பு அங்கியும், தொப்பியும் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. நடனமாடியபடியே பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட யானைகள், துதிக்கையை நீட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளும் கொடுத்தன. மேலும், குட்டி யானை உட்பட 4 யானைகளும் இசைக்கேற்ப நடனமாடிய காட்சி, பள்ளிக் குழந்தைகளை குதூகலமடைய செய்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, யானைகள் மூலம் பரிசுப் பொருட்களை பெற்ற பள்ளிக் குழந்தைகள், மிகுந்த உற்சாகமடைந்தனர்.