சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மஞ்சள் ஆற்றின் இரு கரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கம்பி வடங்களைக் கட்டும் பணி தீவிரம்
Dec 23 2017 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் Xinjiang மாகாணத்தின் மேற்கில் Uygur என்னுமிடத்தில் இருந்து கிழக்கே அன்குய் வரை 3 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து 100 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின்னாற்றலைக் கடத்தும் மின்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, Gansu மாகாணத்தின் Baiyin நகரின் மஞ்சளாற்றின் இருகரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இடையே மொத்தம் 70 டன் எடைகொண்ட 16 கம்பி வடங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் 2 கம்பி வடங்களை வெற்றிகரமாக மின்கோபுரங்களில் கட்டி சீன அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.