ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், திடீர் தீ விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
Mar 26 2018 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது Kemerovo நகரம். ஞாயிற்றுக்கிழமையான நேற்று, விடுமுறை தினம் என்பதால், இங்குள்ள வணிக வளாகத்தில் பொதுமக்கள் பலர் பொருட்களை வாங்க வந்திருந்தனர்.
அப்போது திடீரென அந்த வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர் என்றும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் முதல் கட்டமாக தகவல் வெளியானது. இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.