அர்ஜெண்டினா நாட்டு அரசு சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்.வுடன் உடன்பாடு செய்து கொண்டு பொருளாதார கொள்கையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
May 11 2018 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அர்ஜெண்டினா நாட்டு அரசு சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்.வுடன் உடன்பாடு செய்து கொண்டு, பொருளாதார கொள்கையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் மரிஷியோ மக்ரி, சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்.வுடன் உடன்பாடு செய்து கொண்டு நாட்டின் பொருளாதார கொள்கையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்மூலம் தொழிலாளர்களின் நலச்சட்டங்கள் மாற்றப்படுவதுடன், ஊதியங்கள் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. BUENOS AIRES-ல் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.