கென்யாவில் பெய்த கனமழையால் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி
May 11 2018 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கென்யாவில் Nakuru நகரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக subukia பகுதியில் இருந்த அணை பலவீனம் அடைந்து உடைந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து பெருக்கெடுத்த தண்ணீர், ஊருக்குள் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு தண்ணீர் தத்தளித்த பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.