ஐ.எஸ். தீவிரவாதிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈராக் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் : பலத்த ஏற்பாடு
May 13 2018 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.எஸ். தீவிரவாதிகள் வீழ்ச்சிக்குப் பின்னர், ஈராக் நாடாளுமன்றத்துக்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்றது.
ஈராக்கில், அண்மைக் காலமாக தீவிரவாதத் தாக்குதல் குறைந்துள்ள நிலையில், முதல் முறையாக நேற்று, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஐ.எஸ். தீவிரவாதிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கு தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் இந்தத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தற்போதைய அதிபர் ஹைதர் அல் அபாதி மீண்டும் போட்டியிடுகிறார். தனது ஆட்சியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதை சாதனையாகக் கூறி, அவர் ஆதரவு திரட்டினார். முந்தைய அதிபர் நூரி அல் மாலிக்கியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது ஆட்சிக் காலத்தில், ஈராக்கின் கணிசமான பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமானதால், அவருக்கு போதிய ஆதரவு இருக்காது என்றும், 329 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு, சுமார் ஏழாயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.