கொலம்பியா நாட்டில் கட்டப்பட்டு வரும் அணை உடையும் அபாயம் : 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
May 18 2018 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியா நாட்டில் கட்டப்பட்டு வரும் அணை உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொலம்பியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கவுக்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆற்றின் குறுக்கே இத்வாங்கோ என்ற கட்டப்பட்டு வரும் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியா நாட்டில் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டத்தை உள்ளடக்கி கட்டப்பட்டு வரும் இந்த அணையின் சுரங்க வழிகளில் விரிசல் ஏற்பட்டதால், அணையின் அருகில் உள்ள மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.