அமெரிக்கா-வடகொரியா இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அளித்த கடிதத்தை டிரம்பிடம் கிம் யங் சோல் வழங்கினார்
Jun 2 2018 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இருந்து வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வட கொரியா அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக நடந்து கொண்டால் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவர்த்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. கிம் ஜோங்குடனான சந்திப்பு தடங்கலின்றி நடைபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அந்தச் சந்திப்புக்காக திட்டமிடப்பட்டுள்ள தேதி மற்றும் இடத்தில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து, அந்தப் பேச்சுவார்த்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் டொனால்ட் டிரம்பை, வடகொரிய அதிபர் கிம் யங் சோல் சந்தித்தார். அப்போது, கிம் ஜோங் உன் அளித்த கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார்.