மீண்டும் பலமுறை சந்தித்து பேசுவோம் என வடகொரியா, அமெரிக்‍கா அதிபர்கள் கூட்டாக பேட்டி - இன்றைய சந்திப்பு சர்வதேச அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உறுதி

Jun 12 2018 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிங்கப்பூரில் இன்று சந்தித்து பேசிய அமெரிக்‍க - வடகொரிய அதிபர்கள், தாங்கள் மீண்டும் மீண்டும் சந்தித்து பேசவிருப்பதாக தெரிவித்தனர். இன்றைய சந்திப்பு உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு துருவங்களாக இருந்துவந்த அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் வுன்னும் சிங்கப்பூரில் இன்று சந்தித்து பேசினர். சுமார் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கடந்த காலத்தை மறக்‍க முடிவு செய்துள்ளதாக கூறிய இரு தலைவர்களும், உலகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்‍கும் எனவும் தெரிவித்தனர். இருவரும் மீண்டும் மீண்டும் பலமுறை சந்தித்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதிபர் ட்ரம்ப், கொரியாவுடன் கடந்த காலங்களில் இருந்த உறவுபோல் எதிர்காலங்களில் இருக்‍காது எனத் தெரிவித்தார். வடகொரிய அதிபரை அமெரிக்‍காவிற்கு அழைப்பீர்களா என்ற கேள்விக்‍கு பதிலளித்த ட்ரம்ப், நிச்சயமாக அழைப்பேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00