உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வடகொரியா-அமெரிக்க அதிபர்களின் சந்திப்பு நடந்தேறியது - சிங்கப்பூர் தீவில் இருவரும் 45 நிமிடம் ஆலோசனை - அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என டிரம்ப் உறுதி
Jun 12 2018 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வரலாற்று சிறப்பு மிக்க வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரின் சென்டோசா தீவில் இருவரும் இன்று சந்தித்து சுமார் 40 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் Donald Trump-ம், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஹோட்டலில், சந்தித்து பேச்சுவார்தையில் ஈடுபட்டனர்.
இருவரும் சுமார் 40 நிமிடம் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இருவரும் இணைந்து செயல்பட்டு முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என்றும், அணு ஆயுத பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இரு அதிபர்களும் 40 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்திய பிறகு உயர்நிலை குழுக்களுடனான ஆலோசனையில் ஈடுபட்டனர். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வடகொரியா-அமெரிக்கா அதிபர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதையடுத்து, கொரிய பிராந்தியத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு டொனால்டு டிரம்ப் இன்று சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா திரும்பவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.