இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதைத் தடை செய்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு : அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்பு

Jun 27 2018 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஈரான், வடகொரியா, ஏமன், சிரியா, வெனிசுலா, லிபியா, சோமாலியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்தார். இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் உத்தரவிட்டார்.

டிரம்பின் இந்த உத்தரவு, அமெரிக்காவின் இஸ்லாமிய விரோத நடவடிக்கை என்று உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த தடை உத்தரவை அமெரிக்க உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இஸ்லாமிய நாடுகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரவேற்று, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00