அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களுக்கு எதிராக செயல்படுவதாக இந்திய வம்சாவழி எம்.பி. புகார் - போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது
Jun 30 2018 11:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழி எம்.பி. கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் அயல்நாட்டவர்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக அவர் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களைக் கண்டித்துப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுடன் குடியேறுபவர்களை கைது செய்து தனித்தனியாக சிறையில் அடைக்கும்படி ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதற்கான சட்டத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார். இந்நிலையில், ட்ரம்பின் நடவடிக்கையைக் கண்டித்து, வாஷிங்டனில் போரட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவழி எம்.பி. பிரமிளா ஜெயபால் கைது செய்யப்பட்டார்.