ஜப்பானில் வரலாறு காணாத கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஆக உயர்வு
Jul 13 2018 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளது.
ஜப்பானில், கடந்த வாரம் தொடங்கிய வரலாறு காணாத மழை தற்போது நின்றுள்ள நிலையில், காணாமல் போயுள்ள பலரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். மாயமானவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், மிகவும் முக்கியமான 72 மணி நேரம் கடந்து விட்டது. எனினும் இன்னும் காணாமல் போயுள்ள சுமார் 60 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஜப்பானிய வரலாற்றில், வானிலை பேரிடர் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்பு இது என்று கூறப்படுகிறது.