பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது இருவேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 128-ஆக உயர்வு
Jul 14 2018 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது, இருவேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 128-ஐ தாண்டியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கைபர் பக்துவா என்ற இடத்தில், Balochistan Awami கட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது, வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், Bannu நகரில், ஜமாத் உலமா இ இஸ்லாம் என்ற கட்சியின் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கைபர் பதுங்கவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அக்ராம் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடு திரும்பியபோது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில், 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 100-ஆக அதிரித்தது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ரீதியிலான மோதலால் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.