பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது இருவேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 128-ஆக உயர்வு

Jul 14 2018 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில், தேர்தல் பிரச்சாரக்‍ கூட்டத்தின்போது, இருவேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 128-ஐ தாண்டியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கைபர் பக்‍துவா என்ற இடத்தில், Balochistan Awami கட்சி தேர்தல் பொதுக்‍கூட்டத்தின் போது, வெடிகுண்டு தாக்‍குதல் நடைபெற்றது. இந்த தாக்‍குதலில் 28 பேர் உயிரிழந்தனர். 40க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேபோல், Bannu நகரில், ஜமாத் உலமா இ இஸ்லாம் என்ற கட்சியின் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கைபர் பதுங்கவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அக்ராம் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடு திரும்பியபோது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்‍குதலில், 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்‍கை 100-ஆக அதிரித்தது. மேலும் சிலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்‍கை அதிகரிக்‍கும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ரீதியிலான மோதலால் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00