பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு விழா - இந்திய நட்சத்திரங்களுக்கு அழைப்பு : விழாவில் கண்டிப்பாக கலந்துகொள்வேன் - சித்து
Aug 2 2018 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கும் இம்ரான்கான், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நவ்ஜோத்சிங் சித்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இம்ரான் கானின் Tehreek-e-Insaf கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கவிருக்கிறது. கட்சித் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், வரும் 11-ம் தேதி அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க விருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில், இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்து தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் நவ்ஜோத்சிங் சித்து, பிரபல இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக Tehreek-e-Insaf கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானின் அழைப்பு தன்னை பெருமை படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சித்து அழைப்பை ஏற்றுக் கொண்டு பதவிஏற்ப்பில் கலந்து கொள்ளபோவதாக தெரிவித்துள்ளார். மேலும் இம்ரான் கான் நற்பண்புகள் நிறைந்த நம்பிக்கைக்குறிய மனிதர் என்றும் பாராட்டியுள்ளார்.