சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதக்கிடங்கில் பயங்கர வெடிவிபத்து : குழந்தைகள் உட்பட 39 பேர் பலி

Aug 13 2018 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

சிரியா நாட்டில் ராணுவப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள இத்லிப் மாகாணத்தின் ஷர்மதா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர வெடிபொருட்கள் உள்ளடங்கிய ஆயுதக்கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் இரண்டு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்நிலையில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷர்மதாவிலுள்ள குடியிருப்பு பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் ஆயுதக்கிடங்குகளாக பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் குடியிருப்பு பகுதியிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வெடிவிபத்து குறித்து தெளிவான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது என சிரியா நாட்டின் மனித உரிமைகள் பாதுகாப்பு தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00