இலங்கையின் வன்னி பகுதியில் ஒரே இடத்தில் 90 பேரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு : போர்க்குற்ற விசாரணையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை
Aug 28 2018 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் வன்னி பகுதியில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்த 90 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போரில், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. இறுதிப் போரின் முக்கியப் பகுதியாக விளங்கிய வன்னி பகுதியில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்த 90 பேரின் எலும்புக் கூடுகள் தற்போது கைப்பற்றப்பட்ட சம்பவம், பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன்முலம், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.