இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Oct 12 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவிடம் இருந்து Triump ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவத் தலையீடு, அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இந்திய வருகையின்போது அந்நாட்டிடம் இருந்து 37 ஆயிரம் கோடி ரூபய்க்கு Triump ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம், இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், பொருளாதாரத் தடை தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.