ஈரான் மீது மேலும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா - அந்நாட்டின் முக்கிய வங்கிகளின் பணப் பரிமாற்றத்திற்கும் தடை
Oct 17 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்நாட்டின் முக்கிய வங்கிகளின் பணப் பரிமாற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் உடனான அணு உடன்பாட்டை முறித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை ஏற்பட்டது. மேலும் ஈரான் நாட்டுடன் தொழில் முதலீடு செய்யவும், அந்நாட்டுடன் தொழில் ரீதியான வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்ளவும் அமெரிக்கா தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளார். குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய்க்காக அந்நாட்டின் Bank Mellat மற்றும் Mehr Eqtesad Bank ஆகியவற்றுடன் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ள தற்போது அமெரிக்க தடை விதித்துள்ளது.