சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால், அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை
Oct 19 2018 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால், அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வாஷிடன் போஸ்ட் இதழில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் Jamal Khashoggi, சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அண்மையில், இஸ்தான்ஃபுல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி சென்றவர் திடீரென மாயமானார். அந்த தூதரகத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்ட்டுகளால் ஜமால், கொல்லப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர் Jamal Khashoggi, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பத்திரிகையாளர் Jamal Khashoggi மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, பத்திரிகையாளர் Jamal Khashoggi கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.