சவுதி அரேபிய பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டது மிகவும் தவறான நடவடிக்கை - சவுதி வெளியுறவு அமைச்சர் பகிரங்க தகவல்

Oct 22 2018 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபிய பத்திரிக்கையாளர் கொல்லப்பட்ட செயல் மிகவும் தவறானது என்றும், அது ஒரு மோசமான நடவடிக்கை என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கஷூகி, அந்நாட்டு அரசு பற்றி மிகக் கடுமையாக விமர்சித்து பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். இதற்கு சவுதி அரேபிய அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், கஷூகி துருக்கியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு அவர் திடீரென மாயமானார். அவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாமல் மர்மம் நீடித்தது. அதன் பிறகு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சவுதி அரேபிய அரசு முதன்முறையாக தற்போது கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் Adel al-jubeir, இது கொலை என்பதை ஒப்புக்கொண்டார். இது மிகப்பெரிய தவறு என்றும், தவறான நடவடிக்கை என்றும் தெரிவித்தார். சவுதி அரேபியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா ஏற்கனவே கடுமையான எச்சரிக்ககை விடுத்திருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00