அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய விவகாரம் - அதிபர் டொனால்ட் ட்ரம் கடும் கண்டனம்
Oct 25 2018 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு, அவர்களின் அலுவலக முகவரிகளிக்கு அனுப்பப்பட்ட பார்சலில் வெடிப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை உளவுத்துறை தடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் உளவுப்பிரிவினர், அந்த பார்செல்களில் இருந்த வெடிப்பொருள், அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களுடன் ஒத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு வெடிபொருள் பார்சல்கள் அனுப்பியதற்கு அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.