இலங்கை நாடாளுமன்றம் தற்காலிகமாக முடக்கம் - ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததை தொடர்ந்து, அதிபர் சிறிசேன அதிரடி முடிவு
Oct 27 2018 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில், நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கப் படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக ரணில் விக்ரம சிங்கேவிற்கு பதிலாக, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நேற்று நியமித்து, அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அதிபராக ராஜபக்சே பெறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த ரணில் விக்ரமசிங்கே, தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க, அதிபர் சிறிசேனாவிற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன, தற்காலிகமாக முடக்கி உள்ளார். ரணில் விக்கிரமசிங்கே வாக்கெடுப்பு கோரியிருந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன முடக்கி இருப்பது அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.