இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் : அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

Oct 30 2018 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து திடீரென ரனில் விக்ரமசிங்கேயை சிறிசேனா நீக்கினார். மேலும் முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராகவும் நியமித்தார். மேலும் பிரதமர் இல்லத்தில் உடனடியாக வெளியேற விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிடப்பட்டதுடன், அவரது பாதுகாப்பும் அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் இலங்கை அரசியலில் திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், ரனில் விக்‍ரமசிங்கேதான் பிரதமராக நீடிப்பதாகவும், அவரையே, தான் அங்கீகரிப்பதாகவும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா அறிவித்தது இலங்கை அரசியலில் குழப்பத்தை அதிகரித்தது. இந்நிலையில் புதிய பிரதமராக நியமிக்‍கப்பட்ட ராஜபக்‍சே, கொழும்பு நகரில் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று முறைப்படி பொறுப்பேற்றுக்‍ கொண்டார். இதையடுத்து, இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00